அஸ்ஸலாமு அலைக்கும் கீராநல்லூர் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது*இந்த இணயதளத்தில் உங்கள் திருமணம் வாழ்த்துக்கள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்சிகளும் வெளி இடப்படும் அனுப்ப வேண்டிய இ-மெயில் :nisar9752@gmail.com

Friday, August 24, 2018

தலைமையில் இருப்பவர் கடமை தவறினால் ....

அஸ்ஸலாமு அலைக்கும்  
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக் கேட்டார்கள்: ''முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி, அவர்களிடம் மோசடித்தனமாக நடந்து கொள்வானாயின் அவன் மீது அல்லாஹ் சுவனத்தை ஹராமாக்கி விடுகின்றான்.'' (அறிவிப்பாளர்: மஃகில் பின் யஸார் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)

இஸ்லாம் கூறும் மனிதநேயம்...!

ஹாரிஸ்  ஜமாலி
தற்போதைய இயந்திரத்தனமான உலகில் மனிதர்களிடம் மிக குறைந்து வருவது மனித நேயம் .
1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர சகோதரிகளே…’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார் .