அஸ்ஸலாமு அலைக்கும் கீராநல்லூர் இணயதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது*இந்த இணயதளத்தில் உங்கள் திருமணம் வாழ்த்துக்கள் மற்றும் ஊரில் நடக்கும் நிகழ்சிகளும் வெளி இடப்படும் அனுப்ப வேண்டிய இ-மெயில் :nisar9752@gmail.com

Friday, January 7, 2011

தமிழக அரசின் உயர் பதவிகளில் சேர TNPSC குரூப் - 1 தேர்வுகள்

ஐஏஎஸ், ஐபிஎஸ்-க்கு பிறகு தமிழகத்தில் உயர் பதவிகளாக உள்ள இணை ஆனையர் (டெப்டி கலெக்டர்) , காவல் துறை துணை கண்கானிப்பாளர் (டிஎஸ்பி), மாவட்ட பதிவாளர் இன்னும் மிக முக்கிய அரசு பதவிகளுக்கான முதல் கட்ட தேர்வு வருகின்ற மே மாதம் 22 -ஆம் தேதி நடக்கவிருக்கின்றது. இதற்க்கான விண்ணப்பபடிவம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றது. பட்டம் படித்த யாரும் இந்த தேர்வை எழுதலாம்.

பிப்ரவரி 4, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாய் : துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) இவ்வாண்டுக்கான மீலாத் பேச்சுப் போட்டியினை 04.02.2011 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் சரியாக 4.30 மணிக்கு நடத்த இருக்கிறது.
இன்றைக்கும் பொருந்துகிற இறுதித்தூதரின் சொற்கள், அரபகம் – அண்ணலாரின் வருகைக்கு முன்னரும், பின்னரும் ஆகிய தலைப்புகளில் போட்டியாளர்கள் பேசலாம்.

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
 

அலைபேசி அருமைகளும், அவலங்களும்…


மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி லிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி போன், பிளாக் பெர்ரி (Black berry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 27 ஆகிறது.
1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.